500,000 புதிய புலம்பெயர்வோரை வரவேற்க கனடா திட்டம்-செய்திகளின் தொகுப்பு
கனடா 2023 - 2025ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை வெளியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் 500,000 புதிய புலம்பெயர்வோரை வரவேற்க கனடா திட்டம் வைத்துள்ளது சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
கனடா 2023 - 2025ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை இப்போதுதான் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023இல் 465,000 புதிய புலம்பெயர்ந்தோரை கனடா வரவேற்க உள்ளது. 2024இல் அந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்து, 485,000 புதிய புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட உள்ளார்கள்.
2025இன் இலக்கு மேலும் அதிகரித்து, 500,000 புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட உள்ளார்கள்.
இந்த புலம்பெயர்தல் மட்ட திட்டம் என்பது, கனடா ஆண்டுதோறும் எத்தனை புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க உள்ளது என்பதைக் காட்டும் ஒரு வழிகாட்டு நெறிமுறையாகும்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,