காணாமல் போன 2.5 மில்லியன் டொலர் பணத்தை மீட்டு எடுக்க முடியுமா!
அண்மையில் திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் டொலர் பணத்தை மீட்கக் கூடிய சாத்தியப் பாடுகள் காணப்படுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் (CERT) தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கு சொந்தமான சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை சைபர் தாக்குதல் மூலம் அனுமதியற்ற கணக்கொன்றிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெறும் முறையான விசாரணை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் அந்த தொகையை மீண்டும் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதாக மையத்தின் (CERT) சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளுக்கிடையிலான சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மூலம் இத்தகைய பெரிய அளவிலான மோசடிகளில் இழக்கப்படும் பணத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ‘Business Email Compromise (BEC)’ எனப்படும், நிறுவன மின்னஞ்சல் கணக்குகளில் அனுமதியற்ற நுழைவு பெற்று மேற்கொள்ளப்படும் மோசடி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் மோசடி செய்பவர்கள், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அல்லது நம்பகமான விநியோகஸ்தர்களாக நடித்து, போலியான தகவல்களை வழங்கி பணத்தைப் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகள் மற்றும் தரவு பகுப்பாய்வு தொடர்பாக நிபுணத்துவ உதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணம் பல வெளிநாட்டு நாடுகள் வழியாக பரிமாறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதால், விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியும் பெறப்பட உள்ளது.
மேலும், பிற நாடுகளில் செயல்படும் கணினி அவசர பதிலளிப்பு அணிகளுடன் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சைபர் தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் அதிக கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam