அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை: பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளரக்ள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பினும், பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மாதாந்த பேருந்து கட்டண திருத்தம்
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலை திருத்தம் போன்று மாதாந்திர அடிப்படையில் பேருநது கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் வகையில் தேசிய பேருந்து கட்டண திருத்த கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |