மடு பொலிஸ் நிலையம் முன்பு குடைசாய்ந்து விபத்திற்கு இலக்கான பேருந்து
மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மடு பொலிஸ் நிலையம் முன்பு இன்று காலை குடைசாய்ந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மடு ரோட் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நாய் ஒன்று குறுக்கிட்ட நிலையில் பேருந்து பள்ளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது. பேருந்தில் பயணித்தவர்கள் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.