இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி!
பதுளை - பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று, சித்தியடைந்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில், பசறை கல்வி வலயத்தில் இம் மாணவியே அதிக புள்ளிகளைப்பெற்றுள்ளார்.
பதுளை, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 2021ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
பரீட்சையில் சிறப்பு சித்தி
இவ்விபத்தில் உயிரிழந்த அந்தோனி நோவா (வயது - 32), பெனடிகக் மெடோனோ (வயது 31) ஆகியோரின் மகளே யூஜீனியா என்பது குறிப்பிடத்தக்கது.