புலம்பெயர் இலங்கையர்கள் சம்பந்தமான பணியகம் டிசம்பரில்
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைக்கு உதவுவதற்காக வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணியகம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நேரடியாக பணியகத்துடன் தொடர்புக்கொள்ளலாம்

இலங்கை வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த பணியகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நேரடியாக இந்த பணியகத்துடன் சம்பந்தப்பட்டு இலங்கையின் பணிகளுக்கு உதவ முடியும்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி, ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதான சாகல ரத்நாயக்க மற்றும் நீதியமைச்சின் அதிகாரிகள் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுளளன.
பொருளாதார நெருக்கடியை தீர்க்க புலம்பெயர் மக்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் இலங்கை

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் புலம்பெயர் இலங்கை மக்களின் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தடைகளை அரசாங்கம் அண்மையில் நீக்கியது. புலம்பெயர் அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்பான இந்த பணியகம் திறக்கப்பட உள்ளது.
இலங்கை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இந்த பணியகம் தொடர்பான இணைப்பு அலுவலகங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri