புலம்பெயர் இலங்கையர்கள் சம்பந்தமான பணியகம் டிசம்பரில்
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைக்கு உதவுவதற்காக வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணியகம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நேரடியாக பணியகத்துடன் தொடர்புக்கொள்ளலாம்

இலங்கை வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த பணியகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நேரடியாக இந்த பணியகத்துடன் சம்பந்தப்பட்டு இலங்கையின் பணிகளுக்கு உதவ முடியும்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி, ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதான சாகல ரத்நாயக்க மற்றும் நீதியமைச்சின் அதிகாரிகள் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுளளன.
பொருளாதார நெருக்கடியை தீர்க்க புலம்பெயர் மக்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் இலங்கை

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் புலம்பெயர் இலங்கை மக்களின் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தடைகளை அரசாங்கம் அண்மையில் நீக்கியது. புலம்பெயர் அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் தொடர்பான இந்த பணியகம் திறக்கப்பட உள்ளது.
இலங்கை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இந்த பணியகம் தொடர்பான இணைப்பு அலுவலகங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam