ராஜபக்ச குடும்பத்திற்கெதிராக குரல் கொடுத்த பௌத்த பிக்கு கைது
ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வந்த பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேகந்தவில ராஹுல ஹிமி எனும் பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டா கோ கம போராட்டக்களத்தில் மாத்திரமன்றி ஹம்பாந்தோட்டையிலும் இவர் ராஜபக்ச தரப்புக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக பங்குபற்றியிருந்தார்.
அத்துடன் ராஜபக்ச அரசாங்கத்தின் சுற்றாடலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சூழல் , காடழிப்பு விடயங்களுக்கு எதிராகவும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை வேகந்த ராஹுல ஹிமி வீரகெட்டிய பொலிஸாரினால் வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri