ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள்: கஜேந்திரன் கோரிக்கை
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு திருநெல்வேலி சந்தை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கியிருந்தனர்.
துண்டு பிரசுரம் வழங்கள்
குறித்த துண்டு பிரசுரத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவதோ அல்லது பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை தெரிவு செய்வதில் இவ்வித பயனும் இல்லை என தெரிவித்த செல்வராஜா கஜேந்திரன் தேர்தலை புறக்கணிப்பது தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு தீர்வு எனவும் இதன்போது சுட்டிக்காட்யுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |