இலங்கை மக்களை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் மரணம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களால் நாம் பல அகால மரணங்களை கேட்டும் பார்த்தும் வருகிறோம்.
கொக்கலயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் 25 வயதான ரவிந்து சஹான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்த போது ரயில் கடவையை கடக்க முயற்சித்த நிலையில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த ரவிந்துவின் இறுதிக் கிரியைகள் நாளை (20) கொக்கல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.
திருமணமான ரவிந்துவின் அகால மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
May you like this Video