வெளிநாட்டு வங்கிகளில் 60க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பில்லியன் கணக்கான பணம்?
அறுபத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பல பில்லியன் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் அரசியல்வாதிகள் என அமெரிக்காவின் வெளியாகும் சஞ்சிகை ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் சட்டரீதியான மற்றும் சட்டத்திற்கு முரணான வர்த்தகங்களில் ஈடுபடும் நபர்களும் இதில் அடங்குகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
அண்மையில் பன்டோரா ஆவணங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து, இவர்களில் பெரும்பாலானவர்கள் கடும் பதற்றத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.