நிதி அமைச்சரின் முதலாவது சட்டமூலம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதாகும்!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள முதலாவது சட்ட மூலம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்ட மூலமாகும் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சபை உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்பொழுது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அரசாங்கமானது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு நிவாரணங்களை வழங்கும் சட்ட மூலமொன்றையே கொண்டு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனக்கு நெருக்கமானவர்களுக்கு நலன்களை வழங்குவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நண்பர்கள் மோசடியான வழிகளில் ஈட்டிய பணத்தை தூய்மையாக்குவதற்கு ஆதரவளிப்பது ஏற்புடைதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றின் உதவியை நாட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுளளார்.
கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri