போராட்டக்காரர்களின் பின்னனியில் இரகசிய சக்திகள் தொடர்பில் அசாத் சாலி வெளியிட்ட தகவல்- செய்தி தொகுப்பு
போராட்டக்காரர்களின் பின்னால் இரகசிய சக்திகள் இருந்ததாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களாக நாட்டின் நிர்வாகத்தை இயக்கும் முக்கிய அலுவலகங்களை முடக்கி, ஆர்ப்பாட்டம் செய்வதை அமைதியான ஆர்ப்பாட்டம் என்று சொல்ல முடியாது.
இவர்களிடம் இருந்தவை அனைத்தும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சிகள். ஏதோ ஒரு சக்தி, பின்னாலிருந்து இந்த "அரகலகாரர்களை"(போராட்டக்காரர்களை) இயக்கிய இரகசியங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்னும் மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது மாலை நேர செய்தி தொகுப்பு