மட்டக்களப்பு போக்குவரத்து சபையில் 29 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் நிலைமை அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் 29 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த சாலை மூடப்பட்டுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருவிழாவில் கலந்துகொண்ட அருட்தந்தையர் உட்பட எட்டு பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாலையில் எட்டு தொற்றாளர்கள் எழுமாதிரியாக இனங்காணப்பட்ட நிலையில் நேற்று சாலையில் கடமையாற்றும் 180 பேர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது 21 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், மொத்தமாகக் குறித்த சாலையில் 29 பேர் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதில் கடமையாற்றுவோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் திருத்தலத்தில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் கலந்து கொண்ட அருட்தந்தையர் உட்பட 08 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த திருவிழாவில் கலந்து கொண்டவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

வெறித்தனமான போஸ்டர்.. வெற்றிமாறன் - சிம்பு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
