மட்டக்களப்பை உலுக்கிய சம்பவம் - மூடிய அறைகளுக்குள் அடையாள அணிவகுப்பு

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Kumar Mar 31, 2026 12:34 PM GMT
Report

மட்டக்களப்பில் மயக்கமடையச் செய்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (31.03.2026) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மூடிய நீதிமன்றில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். 

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மூடிய அறைகளுக்குள் சாட்சியான பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது முதலாவது அடையாள அணிவகுப்பில் முதலாம், இரண்டாம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இரண்டாவது அடையாள அணிவகுப்பில் மூன்றாவது நபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

எரிபொருள் விலை..! புதிய திட்டத்திற்கு கிடைத்தது அனுமதி

எரிபொருள் விலை..! புதிய திட்டத்திற்கு கிடைத்தது அனுமதி

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையின் பின் கிணற்றில் வீசப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேகநபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 2ஆம் திகதி வரை விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வத்தளை பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மயக்கமருந்துகளை விநியோகம்செய்த நபரை கைதுசெய்திருந்தனர்.

IMFஇன் அனுமதி கிடைக்கவிட்டால் பேரிடி - எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்..!

IMFஇன் அனுமதி கிடைக்கவிட்டால் பேரிடி - எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்படலாம்..!

நீதிபதி முன் முன்னிலை

விசாரணையின் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஏழாவது சந்தேகநபருடன் முதலாவது சந்தேகநபரும் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது கொக்கட்டிச்சோலை பொலிஸார் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தீயிட்டுப் பொசுக்க தயார்! அமெரிக்காவை மிரள வைக்கும் ஈரானிய இராணுவ பேச்சாளரின் பகீர் தகவல்

தீயிட்டுப் பொசுக்க தயார்! அமெரிக்காவை மிரள வைக்கும் ஈரானிய இராணுவ பேச்சாளரின் பகீர் தகவல்

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாகவும், இளம்தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல்பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கைது

இச்சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர், மயக்கமருந்துகளைப்பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டிசாரதி உட்பட உட்பட ஆறு பேரை 24 மணித்தியாலயத்தில் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார அவசரகால நிலை குறித்து வெளியான தகவல்

இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார அவசரகால நிலை குறித்து வெளியான தகவல்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US