மட்டக்களப்பை உலுக்கிய சம்பவம் - மயக்க மருந்து வழங்கிய சந்தேகநபர் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையின் பின் கிணற்றில் வீசப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேகநபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 2ஆம் திகதி வரை விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வத்தளை பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மயக்கமருந்துகளை விநியோகம்செய்த நபரை கைதுசெய்திருந்தனர்.
நீதிபதி முன் முன்னிலை
விசாரணையின் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஏழாவது சந்தேகநபருடன் முதலாவது சந்தேகநபரும் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது கொக்கட்டிச்சோலை பொலிஸார் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாகவும், இளம்தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல்பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கைது
இச்சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர், மயக்கமருந்துகளைப்பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டிசாரதி உட்பட உட்பட ஆறு பேரை 24 மணித்தியாலயத்தில் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam