மட்டக்களப்பில் கறுப்பு யூலை படுகொலை செம்மணி புதைகுழி சர்வதேச நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
கறுப்பு யூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும் மற்றும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு செம்மணி புதைகுழிக்கும் சர்வதேச நீதிவேண்டி மட்டக்களப்பில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது, நேற்று (28) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்த இந்த கவனயீர்பு ஆர்பாட்டத்தில் கிறிஸ்தவ குருமார்கள் காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
கறுப்பு யூலை சிறிலங்காக அரச பயங்கரவாதத்தின் கொடூரம், செம்மணி புதை குழிக்கு சர்வதேச நீதி வேண்டும், தமிழ் தாயகத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.




ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri