தேர்தல் குறித்து பசிலிடம் ரணில் நேரடியாக கூறியது என்ன..!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நாடாத்துவது குறித்து பசில் தரப்பினர் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் கூட்டணி ஒன்றின் ஊடாக தாம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலைக் கோரும் பசில்

எனினும், நாட்டை பற்றியும் அரசியல் கட்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமாயின் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென பசில் ராஜபக்ச கூறியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் மக்கள் ஜனாதிபதி தேர்தலை கோருவதாகவும், வீழ்ந்திருந்த நாட்டை தாமே மீட்டதாகவும் இதனால் மக்கள் தம்மை நிராகரிக்க வாய்ப்பில்லை என நம்புவதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam