21 இன் ஊடாக பசிலுக்கு முடிவு கட்ட முயற்சிக்கும் ரணில்! ஓயாத மௌனப் புரட்சியில் பசில்!
21ஆவது திருத்தச் சட்டத்தை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகலில் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்படி, இந்த திருத்தச்சட்டத்தில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதுடன் இரட்டைக் குடியுரிமையையும் நீக்கும் வகையிலான முயற்சியே மேற்கொள்ளப்படவுள்ளது.
பசிலுக்கு முடிவு
இது, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும், 21வது திருத்தச் சட்ட வரைவை ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே அவை, கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வரைவின் மீது இன்று முன்மொழிவுகள் அல்லது ஆட்சேபனைகளை கட்சி தலைவர்கள் முன்வைத்தால் இறுதி வரைவு தயாரிக்கப்பட்டு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு பிரதிநிதியை அவர் கூட்டத்துக்கு அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த 21வது வரைவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பசில் ராஜபக்ச கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.