கட்டுநாயக்க விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு புதிய சோதனை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிரமுகர் ஓய்வறையின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் பயணப்பொதிகள் சுங்கத்தினால் இனிவரும் காலங்களில் அதிநவீன பரிசோதனை இயந்திரங்களை கொண்டு (ஸ்கேன்) பரிசோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் கடந்த (23.05.2023)ஆம் திகதியன்று இலங்கைக்குள் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கடத்தப்பட்டதன் நேரடி விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிநவீன பரிசோதனை இயந்திரங்கள்
முக்கிய பிரமுகர்களின் வழியாக செல்பவர்கள் அல்லது வருபவர்கள் தொடர்பில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் இச்செயற்பாடானது பின்பற்றப்படும்.
எவ்வாறாயினும், அதன்பிறகு தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கான அதிநவீன பரிசோதனை இயந்திரங்கள் (ஸ்கேனிங் இயந்திரம்) மூலம் சுங்கப்பிரிவினர், அவர்களின் பொதிகளை பரிசோதனை செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய தொழில்நுட்பம் - ஜனாதிபதி அதிரடி உத்தரவு |
சுங்கத்துறையினர் விசாரணை
கடந்த(23.05.203) தினமன்று நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரியிடம் இருந்து 3.4 கிலோ மதிப்புள்ள தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து சுங்கத்துறை அவருக்கு 7.4 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்தது.
இதன்போது அவருடன் வந்த "உதவியாளர்" என்று கூறப்பட்ட மொஹமட் ஃபைரூனிடம் இருந்து 19 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.அவருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவேளை சப்ரி இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆறு தடவைகள் டுபாய்க்கு பயணம் செய்துள்ளதாக சுங்க விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் ஒரு பணக்கார கடத்தல் குழுவின் பொருட்களை எடுத்து வருபவராக செயல்பட்டிருக்கலாம் என்று சுங்கத்துறை சந்தேகிப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
