புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியமைக்கான காரணம் என்ன - கேள்வியெழுப்பும் நிறுவனம்
இதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஐந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை ஏன் நீக்கியது என தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் [ SOUTH ASIA INSTITUTE FOR POLICY STUDIES - SAIPS ] கேள்வியெழுப்பியுள்ளது.
மேலும், தமிழர் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும், மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, ஜனநாயக, வன்முறையற்ற மற்றும் சக்திவாய்ந்த ஏனைய அமைப்புக்கள் பற்றிய நிலைப்பாடு குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளது.
தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் [ SOUTH ASIA INSTITUTE FOR POLICY STUDIES - SAIPS ] டுவிட்டர் பதிவொன்றினை இட்டு இவ்வாறு வினவியுள்ளது.
Why Sri Lanka is lifting ban only on five Tamil diaspora groups? What about other groups, which are more organized, democratic, non-violent, and powerful, and reflect Tamil’s aspirations?@antonioguterres @SecBlinken @EU_in_Sri_Lanka @USAmbSL @SpeakerPelosi @UKMissionGeneva pic.twitter.com/KPzdNIhjk9
— SOUTH ASIA INSTITUTE FOR POLICY STUDIES (@SAIP_FORSTUDIES) August 14, 2022