விமான நிலைய கமராவில் சிக்கிய இளம் பெண்ணின் மோசமான செயல்-செய்திகளின் தொகுப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் பெண் ஒருவரால் எடுத்துச் செல்ல முயன்ற 05 கிலோ எடையுள்ள ஜெல் வடிவ 04 தங்க பொதிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக நிலையம்(duty-free shopping) ஒன்றில் பணிப்புரியும் 24 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம்(04.07.2023) சோதனையிட்டபோதே குறித்த தங்க பொதிகள் மீட்கப்பட்டதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக நிலையம் ஒன்றில் பணிப்புரியும் 24 வயதுடைய பெண் நேற்று காலை விமான நிலைய வளாகத்தில் இருந்து சட்ட விரோத தங்க பொதிகளை எடுத்து செல்ல முயற்சித்துள்ளார்.
இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய வரியில்லா வணிக நிலையத்தில், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிகிறார்.
இந்நிலையில் அவரின் செயற்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததோடு அவரின் செயற்பாடுகளை சிசிடிவி கருவி மூலம் பார்வையிட ஆரம்பித்தோம்.