கொழும்பு வைத்தியசாலையில் மாயமான குழந்தையின் சடலம்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் ஒகஸ்ட் முதலாம் திகதி குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டது.
மருத்துவமனையின் பிணவறை
கடந்த மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் தெமட்டகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு சென்று குழந்தை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இதன்போது குழந்தையில் சடலம் அங்கு காணாமல் போன விடயம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



