2025இல் நடக்கும் போர்கள் பற்றிய பாபா வங்காவின் கணிப்பு! மனித குலத்திற்கு நடக்க போவது என்ன...
2025ஆம் ஆண்டில் போர் போன்ற மோதல் காரணமாக உலக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்று பாபா வங்கா (Baba Vanga) கணித்துள்ளார்.
அதன் பின்னர் 2028ஆம் ஆண்டில், மனிதர்கள் புதிய வளங்களைத் தேடி வெள்ளி கிரகத்தை அடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.
பெரும் உயிர் சேதம்
இதேவேளை, 2033ஆம் ஆண்டில் பாரிய அளவில் பனிக்கட்டிகள் உருகும் என்றும், இதனால் கடல் மட்டம் அதிகரித்து பாரிய அலைகள் தாக்கி பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நூறு ஆண்டுகளுக்கு பின்னர், வேற்று கிரகவாசிகளுடனான மனித தொடர்பையும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2170 இல் பருவநிலை மாற்றம் பூமியில் அழிவை ஏற்படுத்தும் என்றும், பூமியில் வறட்சி அதிகரித்து மனித வாழ்க்கையை மோசமாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணிப்புகள்
மேலும், செவ்வாய் கிரத்திற்கும் நமது பூமிக்கும் இடையே 3005 இல் போர் ஏற்படும் எனவும், 3797ஆம் ஆண்டில் பூமியில் இருந்து உயிர்கள் பிரியும் என்றும், இறுதியாக 5079 இல் உலகமே அழிந்து மனித இனமும் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கணித்துள்ளார்.
பால்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் இன்றும் உலகளவில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
