வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான இசைபோட்டியின் விருது வழங்கும் விழா.!
புதிய வாழ்வு நிறுவனமும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது நடைபெற்றது.
குறித்த விழாவானது ராஜா சரஸ்வதி மண்டபத்தில், புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிழக்கு மாகாண
பிரதம செயலாளர். வி.பி.பாலசிங்கம், முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் ( யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் முதலாவது
பீடாதிபதி ), மருத்துவ ஜெயதேவி கணேசமூர்த்தி ,
சட்டவியல் நிபுணர் ஜனகன் முத்துகுமார் மற்றும் வி். சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.