எல்லை மீறிய காதல் விவகாரம்! கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
அவிசாவளை – பதுவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரை காயப்படுத்தியதுடன், அவரது தந்தையை கொலை செய்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காதல் விவகாரம் எல்லை மீறியதையடுத்து, காதலியின் தந்தை இவ்வாறு கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் அவிசாவளை – பதுவத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தாக்குதலுக்கு இலக்கான யுவதியும்,அவரது தந்தையும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |