யாழ்.மக்களே அவதானம்: காலாவதியான குளிர்பானம் குறித்து எச்சரிக்கை (Photos)
யாழ். நகர்ப் பகுதியில் உள்ள சில கடைகளுக்குக் காலாவதியான சோடா போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (26.04.2023) விநியோகஸ்தர் ஒருவர், யாழ். நகர்ப் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு காலாவதி திகதி கடந்த சோடா போத்தல்களிலுள்ள திகதியை அழித்து, திகதியில் மாற்றம் செய்து விநியோகிக்கப்பட்டதாக யாழ். நகர் பொதுச் சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்பேரில் விரைந்து செயற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், யாழ். நகர் கடைகளில் ஏழுமாறாகப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
திடீர் பரிசோதனை
இதன்போது, காலாவதி திகதி கடந்த சோடா போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்தும் மற்றும் காலாவதி திகதியை அழித்தும் சோடாப்போத்தல்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விநியோகஸ்தரின் பிறவுன் வீதியில் உள்ள களஞ்சியசாலை யாழ். மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதன் போது காலாவதி திகதி அழிக்கப்பட்ட நிலையில், 1110 சோடா போத்தல்களும் 600 திகதி காலாவதியான சோடா போத்தல்களும் என மொத்தம் 1710 சோடா போத்தல்கள், கடைகளுக்கு விநியோகம் செய்வதற்குத் தயார் நிலையில் இருந்தபோது பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.
குறித்த விநியோகஸ்தரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
