தொண்டாமுத்தூரில் தி.மு.க வேட்பாளர் மீது தாக்குதல் முயற்சி
தமிழக சட்டசபை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக எஸ்.பி வேலுமணி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து தி.மு.க சார்பாக காத்திகேய சிவசேனதிபதி போட்டியிடுகிறார். தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தொண்டாமுத்தூரில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை அ.தி.மு.கவினர் தாக்க முயன்றதாக தெரியவருகிறது.
கார்த்திகேய சிவசேனாதிபதியின் காரை தாக்க முயன்றுள்ளதுடன் அவரை பள்ளிக்குள் சிறை வைக்க முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பவம் காரணமாக தி.மு.கவினர் போராட்டம் நடத்தியுள்ளதுடன், வேட்பாளர் ஒருவருக்கே போதிய பாதுகாப்பு இல்லாததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் சிவசேனாதிபதி குறிப்பிடுகையில், என்னை அ.தி.மு.கவினர் தாக்க முயன்றனர், என் தொண்டர்களை வெளியே அனுப்பி, என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
ஆனால் போலிஸார் இதை தட்டிக் கேட்கவில்லை. அவர்கள் இதை வேடிக்கை பார்த்தனர். தோல்வி பயத்தில் அ.தி.மு.கவினர் இப்படி செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.