அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தமிழ் கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

Ampara Sri Lankan Peoples Weather
By Kumar Feb 25, 2026 06:56 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பகுதியானது கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என அட்டப்பள்ளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அக்குரேகொட இரட்டைக்கொலை! இரண்டாவது துப்பாக்கித்தாரி கைது

அக்குரேகொட இரட்டைக்கொலை! இரண்டாவது துப்பாக்கித்தாரி கைது

 

அட்டப்பள்ளம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீண்ட பழமையான பாரம்பரியங்களைக்கொண்ட தமிழ் கிராமமமாக காணப்படுகின்ற நிலையில், அண்மைக்காலமாக அட்டப்பள்ளத்தின் கரையோரப்பகுதிகள் பாரியளவில் கடலரிப்புக்கு உள்ளாகிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தமிழ் கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Attapallam Area At Risk Of Sinking Into The Sea

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுவந்தபோதிலும் அது பாரியளவிலான கடலரிப்பாக இல்லாத நிலையிலும், அண்மைக்காலமாகவே கடலரிப்பானது பாரியளவில் இடம்பெற்றுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  

கடந்த இரு மாதங்களாக பாரியளவில் கடலரிப்பு இடம்பெற்று வருவதாகவும் சுமார் 500மீற்றருக்கும் அதிகமான பகுதிகள் கடல் உள்வாங்கியுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டவர்களின் காணிகள் கடலுக்குள் சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் தென்னை உற்பத்தியை நோக்காக கொண்டு தென்னை தோப்புகள் காணப்படுகின்றபோதிலும் தென்னை மரங்கள் கடலுக்குள் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி

யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி

 

அரசியல்வாதியொருவரின் பொறுப்பற்ற செயல் 

குறித்த பகுதியில் இருக்கும் அரசியல்வாதியொருவர் கடலுக்குள் பாறை கற்களை கொட்டியுள்ளதன் காரணமாகவே கடலரிப்பானது மக்கள் குடியிருப்பினை சூழ அதிகளவில் நடைபெறுவதாகவும், இது தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கொண்டுசெல்லப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தமிழ் கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Attapallam Area At Risk Of Sinking Into The Sea

கரையோர பகுதிகளிலும் வாழும் மக்கள் தினமும் உயிரை கையில் பிடித்தே வாழும் நிலைமை காணப்படுவதாகவும், இரவில் தூங்கும்போது கடல் கொண்டுசென்றுவிடுமோ என்ற அச்சத்துடனேயே  இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்களம்,பிரதேச செயலகம்,பிரதேச செயலாளர்,மாவட்ட செயலகம்,ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சுகளின் கவனத்திற்கு கடந்த காலத்தில் கொண்டு சென்றபோதிலும் இதுவரையில் எந்தவிதமான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

தனியொருவர் கடலுக்குள் கற்பாறைகளை போட்டுள்ளமை தொடர்பில் கரையோரம்பேணல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு தரப்பினருக்கும் அறிவித்தல்களை வழங்கியபோதிலும் எவரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும், அதேபோன்று தமது பகுதிகளிலும் கற்களை போடுவதன் மூலமே கடலரிப்பினை தடுக்கமுடியும் என நம்புவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் 

இது தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லத்தீப் அவர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,

குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் ஆறு இடங்களில் கடலரிப்பினை தடுக்க அணைகள் அமைப்பதற்கான திட்டமுன்மொழிவுகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களும் அப்பகுதிக்கு விஜயம் செய்து குறித்த பகுதிகளில் கடலரிப்பினை தடுப்பதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இரவோடு இரவாக கடத்தப்பட்ட அரச பேருந்து! சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரவோடு இரவாக கடத்தப்பட்ட அரச பேருந்து! சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தமிழ் கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Attapallam Area At Risk Of Sinking Into The Sea

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தமிழ் கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Attapallam Area At Risk Of Sinking Into The Sea

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தமிழ் கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Attapallam Area At Risk Of Sinking Into The Sea

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தமிழ் கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Attapallam Area At Risk Of Sinking Into The Sea


மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US