அத்தனகல்ல பிரதேச சபையில் கடும் மோதல்! - பெண் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி
அத்தனகல்ல பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண் உறுப்பினர் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் தலைவரும் இந்த மோதலில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் உறுப்பினரது காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேவிபி பிரதேச சபை உறுப்பினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பின்னர் மோதலாக மாறியதாகவும், இதனால் பகல் 12.30 மணி வரை சபை சூடுபிடித்ததாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri