விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,கடந்த 13.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை
பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது
தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள வணிக நிலையம் ஒன்றுக்கு விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்றபோது சந்தேகநபர் ஒரு நாளைக்கு ஒரு விலையினை தீர்மானிக்கின்றீர்கள் என அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 21.10.21 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரச உத்தியோகத்தர்களை தாக்கியமைக்காக
இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri