சிரிய ஜனாதிபதிக்கு தஞ்சமளித்த புடின்: ரஷ்யா உத்தியோகபூர்வ அறிவிப்பு
சிரியாவில் வெடித்த உள்நாட்டு பதற்றம் காரணமாக நாட்டை விட்டு தப்பியோடிய அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு, ரஷ்யா தஞ்சமளித்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை கூறியுள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது தனது குடும்பத்துடன் அங்கே தஞ்சமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் அசாத்திற்கு தஞ்சமளித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
புடினின் செய்தித் தொடர்பாளர்
இதுதொடர்பாக புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,

"அரசு தலைவர் இல்லாமல் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது. இது அவரது முடிவு. ஜனாதிபதி அசாத் இருக்கும் இடத்தைப் பொறுத்தவரை, நான் உங்களிடம் எதுவும் கூற முடியாது.
ஆட்சிக் கவிழ்ப்பு என்பது உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, இந்த விடயத்தில் நாங்கள் விதிவிலக்கல்ல" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam