வங்கிகளில் பணம் வைப்பு செய்வோருக்கு இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கை
வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி பணம் வைப்பிலிடுமாறு கோரினால் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு கோருவது மோசடியாக இருக்கக் கூடும் எனவும், முறையான ஆய்வுகள் இன்றி பணத்தை வைப்புச் செய்வதை தவிர்க்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இதேவேளை, நீங்கள் இவ்வாறான மோசடிக்கு ஆளாகியிருந்தால் அல்லது இவ்வாறான மோசடி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்குமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே பணம் வைப்பிட்டிருந்தால் அந்த நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்துள்ளதா என ஆராயுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
