அருவியில் குளிக்க சென்ற இராணுவ அதிகாரி பலி
இரத்தினபுரி குருவிட்ட பொலிஸ் பிரிவில் வலந்துர கெரடி நீரருவியில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன இராணுவ கெப்டனில் சடலம் நேற்று நீரருவிக்கு கீழே உள்ள ஆற்றில் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குருவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள், குருவிட்ட இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குருவிட்ட கெமுனு ஹேவா படைப்பிரிவில் பணியாற்றி வந்த மில்லவிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான கெப்டன் சுரன் ரணசிங்க என்ற 32 வயதான அதிகாரியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மேலும் மூன்று பேருடன் இணைந்து கடந்த 5 ஆம் திகதி நீரருவியில் குளிக்க சென்றுள்ளார். இவர்களில் இரண்டு பேர் குளித்து விட்டு கரைக்கு திரும்பிச் சென்றுள்ளன். இரண்டு பேர் தொடர்ந்தும் அருவியில் குளித்துள்ளனர்.
திடீரென புரண்டு வந்த தண்ணீரில் இராணுவ அதிகாரி அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர், மரக் கிளை ஒன்றை பற்றிப்பிடித்து உயிர் தப்பியுள்ளார்.
இதனையடுத்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட அதிகாரியை தேடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர் சடலமாக நேற்று மாலை மீட்கப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam