விலங்கியல் பூங்காக்களில் விலங்குகளுக்கு கோவிட் பரவ வௌவால்கள் காரணமா?
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் சிங்கம் உள்ளிட்ட சில விலங்குகளுக்கு கோவிட் பரவக் காரணம் அங்குள்ள வௌவால்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் தோர் என்ற சிங்கத்திற்கே முதலில் கோவிட் வைரஸ் தொற்றியது.
அந்த சிங்கத்தின் நிலைமையானது மகிழ்ச்சியானதாக இருப்பதாக கூற முடியாது கோவிட் தொற்றியுள்ள சிங்கக் குட்டிகள் , இரண்டு ஓரங்குட்டன் குரங்குகள், இரண்டு சிம்பன்சிகளின் நிலைமை சாதாரணமாக இருக்கின்றது எனவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
தெஹிவளை விலங்கியல் பூங்கா உட்பட அனைத்து விலங்கியல் பூங்காக்களும் நாளை மறுதினம் திறக்கப்படும் எனவும் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கூறியுள்ளார்.
விலங்கியல் பூங்காக்கள் மூடப்பட்டதன் காரணமாக அங்குள்ள விலங்குகளுக்கு தேவையான உணவுக்கான செலவுகளை பெற முடியாமல் கஷ்டங்களுக்கு உள்ளானதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.