இதனால்தான் நாடாளுமன்றில் தூங்கினேன்! சபையில் தெரியப்படுத்திய அர்ச்சுனா
வடக்கு மாகாணத்துக்கு 2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித பயனும் இல்லாததால் தான் ஜனாதிபதியால் பாதீடு வாசிக்கப்பட்டபோது நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தான் நித்திரை கொண்டமை தொடர்பாக நிசாம் காரியப்பர் நேற்று சபையில் கருத்து வெளியிட்டிருந்ததாகவும், அது எனது தனிப்பட்ட விடயம்.
அத்துடன், சபைக்கு வந்ததன் பின்னர் பாதீட்டை முழுமையாக வாசித்ததாகவும், அதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை தன்னால் கூற முடியும்.
வடக்கு குறித்து இந்த பாதீட்டில் எந்த விடயங்களும் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்த அர்ச்சுனா, அதனால் தனக்குச் சம்பந்தப்படாத விடயம் என்பதனாலேயே தான் நித்திரை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
you may like this
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam