தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை நியமித்து கோவிட்டை கட்டுப்படுத்த கோரிக்கை
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை நியமித்து கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இந்த கோரிக்கையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்த நேரத்தில் குறித்த குழுவை நியமித்து அதனை கூட்டுவதற்கு அரசாங்கம் சட்டபூர்வமாக கடமைப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி ஜனாதிபதி பேரிடர் மேலாண்மை குழுவுக்கு தலைமை தாங்க வேண்டும், அதே நேரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஐந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் சேர்க்கப்பட வேண்டும். எனவே இந்த குழுவை விரைவில் அமைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கோவிட்டினால் நாளாந்தம் சுமார் 25 பேர் மரணமாகின்றனர்.வருகின்றனர், தினமும் 2000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவாகின்றன.
எனவே இந்த குழுவை அமைப்பது பொருத்தமானது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி முதல் இங்கிலாந்து மாறுபாடு இலங்கையில் பரவியுள்ளதாக சுகாதார நிபுணர் ரவீந்திர ரன்னன்-எலிய கூறிய போதும் அதனை அரசாங்கம் புறக்கணித்து விட்டதாக சில்வா குற்றம் சாட்டினார்.
"இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்பாக உளவுத்துறை அளித்த எச்சரிக்கைகளை முன்னைய அரசாங்கம்
புறக்கணித்ததைப் போன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்