மகிந்தவின் கனவை நனவாக்கும் அநுர : ஆபத்தாகப் போகும் அமைச்சரவை அனுமதி
வடக்கில் பெரும் சிங்களக் குடியேற்றத்திற்கு அநுர அரசு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய நீர்ப்பாசன முயற்சியாகவே கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இது தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வடிவமாகும் என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிவுல் ஓயாத் குடியேற்றத் திட்டம் மூலம் மணலாறில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்களை குடியமர்த்தும் திட்டம் பெரும் நிதிச் செலவில் அரங்கேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விகாரங்களின் பின் செயற்படுத்தப்படும் மிக முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் ஆராய்கிறது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி....