இந்திய மாநில முதல்வரைப் போன்று செயற்படும் அநுர : சாடும் முன்னாள் இராஜதந்திரி

Anura Kumara Dissanayaka Narendra Modi Dayan Jayatilleka
By Kamal Apr 12, 2025 02:17 AM GMT
Report

இலங்கையில் இந்திய ஆயுத உற்பத்திசாலை மற்றும் ஆயுதக் களஞ்சியம் என்பனவற்றை உருவாக்குவது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதாகவே இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களை உடைப்பதில் இரகசிய நகர்வுகள்!

தமிழ் மக்களை உடைப்பதில் இரகசிய நகர்வுகள்!

இலங்கை விஜயத்தின் போது பல்வேறு சமிக்ஞைகள்

இந்தியாவுடன் இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக அரசாங்கத் தரப்பில் கூறிய போதிலும் இந்திய ஊடகங்கள் இதனை பாதுகாப்பு ஒப்பந்தம் என அடையாளப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுயாதீனமான நாடாக இருக்க வேண்டுமெனவும் இந்தியா, சீனா அல்லது அமெரிக்காவின் தரப்பாக செயற்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார் இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவின் மாநிலமாக மாற்றமடைந்து விடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மாநில முதல்வரைப் போன்று செயற்படும் அநுர : சாடும் முன்னாள் இராஜதந்திரி | Anura Acting Like Indian Satate Cm Says Dayan

தற்போதைய நிலைமையில் இலங்கை ஜனாதிபதி இந்திய மாநிலமொன்றின் முதல்வரைப் போன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு சமிக்ஞைகள் வெளிப்பட்டதாகவும் வேறு எந்தவொரு நாட்டு தலைவருக்கும் வழங்கப்படாத வரவேற்பு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சுதந்திர சதுக்கத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவரை இதுவரையில் வரவேற்றது கிடையாது மேலும் மித்ர விபூஷன பதக்கம் இந்திய பிரதமருக்கு ஜனாதிபதியினால் அணிவிக்கப்பட்டதாக தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து மோடி இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றது மற்றுமொரு சமிக்ஞையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

வழமைக்கு மாறான அனுமதிகள்

அனுராதபுரம் விமான நிலையம் சில மணித்தியாலங்களுக்கு சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டமை வித்தியாசமான ஓர் நிகழ்வாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம், நமது எந்தவொரு இடத்திற்கும் வந்து செல்வதற்கு இந்திய பிரதமருக்கு பூரண அனுமதி வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்திய மாநில முதல்வரைப் போன்று செயற்படும் அநுர : சாடும் முன்னாள் இராஜதந்திரி | Anura Acting Like Indian Satate Cm Says Dayan

இந்திய பிரதமர் புறப்பட்டுச் சென்ற விதமும் வித்தியாமானது எனவும் அவர் ராமர் சேது பாலம் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதியின் ஊடாகவே உலங்கு வானூர்தியில் பயணம் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்திற்கும் மன்னாருக்கும் இடையில் பாலமொன்றை அமைப்பது தொடர்பிலான முனைப்புக்கள் 2001ம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு விஜயம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொண்டு செல்லும் போது ராமர் சேது பாலம் அமையப் பெற்றுள்ளதாக கூறப்படும் பகுதி வழியாக பயணிப்பதன் மூலம் அடுத்த செய்யப் போவது இதைத்தான் என்ற சமிக்ஞையை இந்திய பிரதமர் வழங்கியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அனைத்து விடயங்களையும் பார்வையிடும் வித்தியாசமான வழமைக்கு மாறான அனுமதிகளை நாம் இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகவே தென்படுகின்றது இது ஆரோக்கியமானதல்ல என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் வெளிநாடொன்றுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் மூடிமறைக்கப்படவில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் இந்த ஒப்பந்தம் பற்றிய விபரங்களை ஏன் மூடி மறைக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு கெட்ட விடயமும் இல்லையென்றால் ஏன் தற்போதைய அரசாங்கம் ஒப்பந்தம் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்த தயங்குகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக வர்த்தகப் போர் விவகாரத்திலும் நாம் எந்தவொரு நாட்டின் பக்கத்தினையும் எடுக்கக் கூடாது எனவும் நாம் நடுநிலையாக செயற்பட வேண்டுமெனவும் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது

வீதியில் நிறைந்துவழியும் மக்கள் கூட்டம்! பல முக்கிய நகரங்களில் கடும் பயண நெரிசல்

வீதியில் நிறைந்துவழியும் மக்கள் கூட்டம்! பல முக்கிய நகரங்களில் கடும் பயண நெரிசல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US