நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றின் படைக்கள சேவிதர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இதேவேளை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.