யாழில் பிக்கு ஒருவரின் செயற்பாடு குறித்து வெளியான இரகசியம்-செய்திகளின் தொகுப்பு
சுன்னாகம், கந்தரோடையில் தமிழ் - பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்துக்கு அருகில் தனியார் ஒருவரின் காணியில் விகாரை அமைப்பதற்கான விண்ணப்பத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தொல்லியல் திணைக்களத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.
இதற்கான அனுமதிகளை வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களமும் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த விகாரைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுன்னாகம், கந்தரோடையில் தமிழ் - பௌத்த எச்சங்கள் காணப்படுகின்றன. இவை தொல்லியல் திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ளன.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,