கோவிட் தொற்றால் மற்றுமொரு மருத்துவர் மரணம்
கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கட்டுகஸ்தோட்ட-மாவில்மட பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஜைத் ரஃபைதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்றுக்கு உள்ளான இவர் கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் கடந்த மூன்று வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,அவரது உடல் இன்று சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.