நாட்டில் சடுதியாக உயர்வடைந்துள்ள கோவிட் மரணங்களின் எண்ணிக்கை
நேற்றைய தினம் (23) நாட்டில் மேலும் 52 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 26 ஆண்களும் மற்றும் 26 பெண்களும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 266,665 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.