இலங்கைக்குள் மேலும் 45 பேர் கோவிட் தொற்றால் மரணம்
நாட்டில் நேற்று (24) கோவிட் தொற்றால் 45 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,099 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரை காலப்பகுதியில் 1190 கோவிட் தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 296040 ஆக உயர்ந்துள்ளது. 24384பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 267602 பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமாகியுள்ளனர்.