மின் கட்டணம் செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
மின்சார கட்டண பட்டியலை குறுஞ்செய்தி சேவை மூலம் பெறும் வசதி இல்லாத நுகர்வோருக்கு அவர்களின் கோரிக்கையின் பேரில் மின் கட்டண பட்டியல் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மின் நுகர்வோருக்கும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படாது என அவர் நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், ஒரு மாதம் மற்றும் 16 நாட்களின் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மின் கட்டணம்
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, கொழும்பு மாவட்ட உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இதனை கூறினார்.
குறுஞ்செய்தி சேவை மூலம் மின் கட்டணத்தை வழங்கும் நடைமுறை இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்படுகிறது. எனினும் 2.9 சதவீத மின்சார நுகர்வோர் மட்டுமே குறுஞ்செய்தி பெற பதிவு செய்யப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
தொலைபேசி அழைப்பு
குறுஞ்செய்தி சேவை செயல்பாட்டில் இருக்கும்போது தொலைபேசி அழைப்பு விடுப்பதால் கூடுதல் செலவுகள் மற்றும் ஊழியர்கள் தேவை ஏற்படும். இதனால் இது தேவைக்கேற்ப பரிசீலிக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எது செயல்படுத்தப்பட்டாலும், அதற்கு பதிலளிக்காத ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
