இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் : செய்திகளின் தொகுப்பு
இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்' என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து முதல் ஆறு லட்சம் வரையிலான தமிழர்களுக்கு முறையான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகள் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவை உடனடியாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு