அரச சேவையாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video)
அரசசேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் இந்த சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
யாழ்.தாதியியல் கல்லூரியில் இன்றையதினம் (27.06.2023) இடம்பெற்ற குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ''நான் கடமையாற்றிய திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் அந்தந்த நலன்புரி அமைப்புகளின் ஊடாக இரத்ததான முகாம்களை கட்டாயமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அந்த நடவடிக்கைக்கு அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தேன்.
இரத்ததான பணி முன்னெடுப்பு
எனினும் தற்பொழுது நான் அரசாங்க அதிபராக பதவியெற்ற பின்னர் சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அந்தந்த பிரிவுகளில் இரத்ததான முகாம்களை நடத்தி செயற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கின்றேன்.
அண்மையிலும் சில பிரதேச செயலகங்களில் இரத்ததான முகாம்கள் இடம்பெற்றிருந்தமை நீங்கள் அறிந்த விடயம். இந்த இரத்ததான பணியானது தொடர்ந்து மேற்க்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் எங்களுடைய அலுவலகங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என கூறி வைக்க விரும்புகின்றேன்.
அத்துடன் அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் எதையாவது இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும்"என்றார்.
குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு
மேலும் இந்த நிகழ்வில், 100 குருதிக் கொடையாளர்களும், 50 குருதி கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களும் கௌரவமளிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அதிபர் அ.சிவபாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி, வைத்தியசாலை அதிகாரிகள், இரத்த வங்கி உத்தியோகத்தர்கள், தேசிய குருதிமாற்று பிரயோக சேவையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு குருதிக் கொடையாளர்களுக்கு கெளரவம் வழங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
