பிரபல ஜப்பானிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - ஆட்டங்காணப் போகும் இலங்கை
ஜப்பானிய வர்த்தக துறையில் மாபெரும் நிறுவனமான Mitsubishi இலங்கையில் தனது செயற்பாடுகளை அடுத்த மாதம் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் தற்காலிகமாக நிறுத்தியமை, இலகு ரயில் திட்டம், இயற்கை திரவ வாயு திட்டம் உட்பட ஜப்பானின் புதிய திட்ட யோசனைகளை திடீரென ரத்து செய்தமை, பாதகமான சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு 60 வருடங்களின் பின்னர் Mitsubishi தனது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது என இலங்கை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் பிரதான பங்காளியான Mitsubishi, ஏறக்குறைய 60 வருடங்களாக இலங்கையின் சில உட்கட்டமைப்பு திட்டங்களில் பிரதான பங்குதாரராக இருந்து வருகின்றது.
Mitsubishiயின் கொழும்பு அலுவலகத்தை மார்ச் 31ஆம் திகதி மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தனியார் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்ததுடன் Mitsubishiயின் இந்த முடிவால் இலங்கை பெரும் பின்னடைவை சந்திக்கும் என உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநராக உள்ளதுடன், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாத நிலவரப்படி, இலங்கை ஜப்பானுக்கு 2.46 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.

Mitsubishi வெளிநாட்டில் திறக்கப்பட்ட முதல் அலுவலகங்களில் இலங்கை அலுவலகமும் ஒன்றாகும்.
இலங்கையின் பல நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு Mitsubishi பங்களித்துள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமையினால் நிதியளிக்கப்பட்ட பல திட்டங்களில் Mitsubishi ஒரு முக்கிய செயல்பாட்டு பங்காளியாக இருந்தது.
Mitsubishiயின் கொழும்பு அலுவலகத்தில் இருபது ஊழியர்களே உள்ள போதிலும், நிறுவனத்தின் வர்த்தக மற்றும் திட்டத் துறைகள் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri