அம்பிட்டிய தேரருக்கு பிணை.. வெளியில் வந்து புலம்பல்
அம்பிட்டிய தேரருக்கு பிணை..
இன்று காலை கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த அம்பிட்டியே தேரர், “அப்பாவி சிறுவர்கள் இருவருக்காக நான் நீதி கோரியமையினால் என்னை இன்று காலை பொலிஸார் கைது செய்ததாகவும், தண்ணீர் கூட கொடுக்காமல் இதுவரை வைத்திருந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும், நீதிமன்றம் தனக்கு பிணை வழங்கியதாகவும்” கூறினார்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறையில் வைத்து அவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு..
அம்பாறை - உஹன பொலிஸ் நிலையத்தில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், குழப்ப நிலையை தோற்றுவித்ததாகவும் தெரிவித்து சுமணரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
