யோஷித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா,
''நாட்டில் தனிநபர்களிடம் அனுமதிப்பத்திரத்துடன் கூடிய 1,697 துப்பாக்கிகள் உள்ளன.
துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம்
அத்துடன், துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 1,550 என தரவுகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, எண்ணிக்கை சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்காக அவற்றில் 1,368 துப்பாக்கிகள் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை சரிபார்ப்புக்காக 182 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.
அவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
யோஷித்த ராஜபக்ச
இதேவேளை, யோஷித்த ராஜபக்சவிடம் சுமார் 6 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன.
அவற்றில் இரண்டு துப்பாக்கிகள் மீள ஒப்படைக்கப்படவில்லை. அதனை ஒப்படைக்குமாறு அவருக்கு அறிவித்துள்ளோம்.
புலனாய்வு பிரிவின் மீளாய்வின் பின்னரே துப்பாக்கிகளை மீள வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
