சர்வகட்சி அரசாங்கம்! ரணிலிடம் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று(01) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்
இந்த கடிதத்தில், “ஏற்கனவே நியமித்துள்ள அமைச்சரவையை ரத்து செய்ய வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்களை உள்ளடக்கிய வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சில நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தை கையாளும் போது பின்பற்றப் போகும் முறைகளை, ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும். இவை மேற்கொள்ளப்படாவிட்டால், ஜனாதிபதியுடன் நடத்தப்படும் திறந்த உரையாடல்களில் எந்தப் பயனும் இல்லை.
சம்பிக்கவின் வலியுறுத்தல்
நீங்கள் உருவாக்க உத்தேசித்துள்ள புதிய அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கட்சியும் குழுக்களில் இணைவதன் மூலம் நாடாளுமன்றத்தில் பங்கு வகிக்க முடியும்.
ஜனாதிபதி உருவாக்க உத்தேசிக்கும் அரசாங்கம் உண்மையிலேயே அனைத்துக் கட்சி
அரசாங்கமாகவும் அனைத்து அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் வேலைத்திட்டத்தை
முன்னெடுக்கும் அரசாங்கமாகவும் இருக்க வேண்டும்.
எனவே அனைத்து கட்சி ஆட்சி பற்றிய உரையாடல் தொடர்வது, தமது நிலைப்பாட்டுக்கு,
ஜனாதிபதி தரப்பில் தரப்படும் பதில்கள் பொறுத்தது” என்று ரணவக்க தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

வடிவேலுவின் கன்னத்தை கிள்ளி விளையாடும் ராதிகா! சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் நடக்கும் கூத்து - வைரலாகும் வீடியோ Manithan
