காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவி...!
காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்காக ஒரு நிதியை நிறுவுவதற்கு எகிப்தில் நடந்த கூட்டத்தில் ஒரு முக்கிய இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
எகிப்த்தின், ஷர்ம் எல்-ஷேக்கில் பேச்சுவார்த்தைகள் நேற்று (19.11.2022) இரவு முழுவதும் இடம்பெற்றன.
இந்தப் பேச்சுவார்த்தைகள், காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு "நஷ்டம் மற்றும் சேதம்" என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
நிதியுதவி பற்றிய விவாதம்
பணக்கார நாடுகள், காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் வரலாற்று ரீதியாக முக்கிய பங்கு வகித்ததால், பாதிக்கப்படும் நாடுகளுக்கு, பல நூற்றாண்டுகளுக்கு, பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அஞ்சி 30 ஆண்டுகளாக, இந்த நிதியுதவி பற்றிய விவாதத்தை எதிர்த்து வந்தன.
ஆனால், அண்மைய ஆண்டுகளில் பாக்கிஸ்தான், நைஜீரியா மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கங்கள் சமநிலையைக் குறைத்துள்ளன. இதனையடுத்தே இழப்புகள் மற்றும் சேதங்கள் பற்றிய பிரச்சினை இறுதியாக பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை இதைப் பற்றிய விவாதங்களை மீண்டும் ஆரம்பித்ததாக மாநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.